விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை:
இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தோட்டக்கலைத் துறை மூலம் இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பருவம் தவறிய காலத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4,000 வீதம் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.
- இதேபோல் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.2,500மும், காய்கனி பயிர்களான வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடி வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
- இது தவிர அங்கக சான்று பெறுவதற்கும் ரூ.500 மானியம்
- அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஒரு விவசாயிக்கு மானியம் வழங்கப்படும்.
-
- இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ விண்ணப்பிக்கலாம்.
- ஊக்கத் தொகை பெற விரும்புபவர்கள், சம்மந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கனி சாகுபடி செய்த பரப்பு விவரங்கள் சிட்டா, அடங்கல், வயல் புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அந்ததந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்கலாம்.
- உழவன் செயலி மற்றும் இணையதளம் மூலமும் முன்பதிவு செய்யலாம்.
- மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தகவல்
பெருமாள்சாமி
துணை இயக்குநர்
தோட்டக் கலைத் துறை
திண்டுக்கல் மாவட்டம்
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். பகிருங்கள் நன்றி