tilapia 3869240 640

இலவச மீன் பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு

இலவச மீன் பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு : tamil nadu agriculture department schemes 2020

 

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உங்கள் தோட்டக்கலை துறை அல்லது வேளாண் விரிவாக்க அதிகாரியை அணுகவும். இவர்களின் தொலைபேசி எண் அறிய உழவன் செயலியை அணுகவும்.

 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர்கள் மூலம் சொட்டு நீர் பாசனம் மற்றும் தௌpப்பு நீர் பாசனம் அமைத்திட சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்க நிகழாண்டில் (2020-2021) ரூ.8 கோடி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும். ரூ.12 கோடி செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சொட்டு நீர் மற்றும் தௌpப்பு நீர் பாசனம் அமைக்கும் விவாசயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு, மின் மோட்டார், பாசனக் குழாய் மற்றும் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு நிகழாண்டில் (2020-2021) ரூ.104.6 லட்சம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், ரூ.2,004 லட்சம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


விளம்பரம் : நாட்டுக்கோழி வேண்டும் :9677711318

மழை நீரை சேமிக்க, சிறு குளம் வெட்டுதல், சம உயர வரப்பு அமைத்தல், கசிவு நீர் குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன. இவற்றில் மிகச்சிறந்ததும், மழை நீரை சேமித்து, முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணைக்குட்டைகள் மட்டுமே. தோட்டத்தில் பெய்யும் மழை நீர் வீணாகாமல் சேகரித்து, பயிர் சாகுபடிக்கு பயன்படுத்த பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுகிறது.

 

விவசாய நிலத்தில், 60 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்து, அதன்மேல் நீரை தேக்கி வைக்க, 300 மைக்ரான் அடர்த்தியுள்ள பாலித்தீன் சீட் பரப்ப வேண்டும். இதற்கு, ரூபாய் 75,000 மானியம் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற 9677584169, 9942056460 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளம்பரம் : எள் விதை விற்பனைக்கு :8438359762

சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர்ப்பாசனம் செய்வது சிறந்த நீர் மேலாண்மை ஆகும். மத்திய, மாநில அரசு நிதி உதவி பெறும் பிஎம்கேஎஸ்ஒய் திட்டத்தில், 2020 – 2021 நிதியாண்டிற்காக மடத்துக்குளம் பகுதியில், 1,800 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டமாக கூடுதல் மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்: 

  1. சிட்டா அடங்கல்,
  2. உரிமைச்சான்று,
  3. நில வரைபடம்,
  4. விவசாயி புகைப்படம்,
  5. ஆதார் அட்டை,
  6. ரேஷன்கார்டு,
  7. சிறு, குறு விவசாயி சான்று

 ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விவசாயிகள் பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி


Comments

One response to “இலவச மீன் பண்ணைக்குட்டை அமைக்க அழைப்பு”

  1. அய்யா, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா நடுப்பட்டி கிராமத்தி உள்ள எனது இரண்டு ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *