இலவச சொட்டுநீர் பாசனம் : Tamil Nadu agriculture department schemes 2020
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உங்கள் தோட்டக்கலை துறை அல்லது வேளாண் விரிவாக்க அதிகாரியை அணுகவும். இவர்களின் தொலைபேசி எண் அறிய உழவன் செயலியை அணுகவும்.
சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர்ப்பாசனம் செய்வது சிறந்த நீர் மேலாண்மை ஆகும். மத்திய, மாநில அரசு நிதி உதவி பெறும் பிஎம்கேஎஸ்ஒய் திட்டத்தில், 2020 – 2021 நிதியாண்டிற்காக மடத்துக்குளம் பகுதியில், 1,800 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டமாக கூடுதல் மானியம் முழுமையாக வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:
- சிட்டா அடங்கல்,
- உரிமைச்சான்று,
- நில வரைபடம்,
- விவசாயி புகைப்படம்,
- ஆதார் அட்டை,
- ரேஷன்கார்டு,
- சிறு, குறு விவசாயி சான்று
ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து விவசாயிகள் பயன்பெறலாம். கூடுதல் தகவல்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் : நாட்டுமருந்துகள் ஆன்லைன்-ல் வாங்க நாட்டுமருந்து.காம்
மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி : siruthozhilmunaivor@gmail.com
குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி