போர் போட மானியம் 2020

விவசாயிகளுக்கு போர்போட 10.19 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

விவசாயம் அரசு மானியம் 2020 | ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் 2020

விவசாய குழுக்களுக்கு சமுதாய ஆழ்துளை கிணறு, பம்பு செட்டுகளுடன் பாசன வசதியை உருவாக்கித் தரும் திட்டத்திற்காக ரூ. 10.19 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சாகுபடிப் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை

இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாகுபடிப் பரப்பை அதிகரித்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு (Government of Tamilnadu) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

55,000 முதலீட்த்தில் ஆடுவளர்த்து மாதம் 10000 இலாபம்

அதன் தொடர்ச்சியாக, சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய குழுக்களை (Farmers Community Groups) உருவாக்கி, பம்பு செட்டுகளுடன் சமுதாய ஆழ்துளை கிணறு (Borewell) அமைப்பதற்கு, ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார் .

முதல் தவணையாக ரூ.6.11 கோடியை ஒதுக்கீடு

அதன்படி, முதற்கட்டமாக, 2020-21 ஆம் நிதி ஆண்டில் 14 மாவட்டங்களில் பாசன வசதி இல்லாத இடங்களில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய 118 விவசாய குழுமங்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூ.10.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்துவதற்கும், முதல் தவணையாக ரூ.6.11 கோடியை நிதி வழங்குவதற்குமான அரசாணையினை 10.07.2020 அன்று வெளியிட்டுள்ளது.

14 மாவட்டங்கள் தேர்வு 

அதன்படி, அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை,புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவள்ளுர், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் பொதுப்பணித் துறையினால் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டம் என கண்டறியப்பட்ட 47 குறுவட்டங்களில் 1,233 சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் நீரினை விவசாயிகளுக்கிடையே பங்கிட்டுப் பயன்பெறும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற

இத்திட்டத்தின் கீழ், குழு உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், குழாய் கிணறு / ஆழ்துளை கிணறு / திறந்தவெளி கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு சூரிய சக்தி / மின் சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் அமைத்தல், பாசன நீரினை வீணாக்காமல் நேரடியாக வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

விலை விபரம் – Tarrif Details 

அரசாணையின்படி, இத்திட்டத்தின் கீழ், 90 மீட்டர் ஆழத்தில் குழாய் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ. 3 இலட்சமும், 100 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.1.1 இலட்சமும், 20 மீட்டர் ஆழத்தில் திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.6.5 இலட்சமும், சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டு அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.3.25 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.

Keywords: ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் 2020, கிணறு வெட்ட மானியம் 2020, விவசாயம் அரசு மானியம் 2020, மத்திய அரசின் விவசாய திட்டங்கள், விவசாயம் அரசு மானியம் 2021

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி