பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 6000 பெற விண்ணப்பிப்பது எப்படி

2348

விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி 6000 பெற விண்ணப்பிப்பது எப்படி: PM Kisan samman nidhi in Tamil

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பி.எம்-கிசான்) என்பது விவசாயிகளுக்குக்கான மத்திய அரசின் நலத்திட்டமாகும். இது இந்திய அரசினால் 100% நிதி அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் 1.12.2018 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மூன்று சமமான தவணைகளில் விவசாயிகளுக்கு ரூபாய் 2,000/- என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 6,000/- என்ற நிலையான தொகையை மத்திய அரசு வழங்குகிறது.

வரையறைகள்

இத்திட்டத்திற்கான குடும்பத்தின் வரையறை கணவன், மனைவி மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

இந்த நிதி உதவியைப் பெற வேண்டும் என்றால் விவசாயிகளுக்கு 2 ஹெக்டேருக்கு குறைவாக (சிறு மற்றும் குறு விவசாயி) அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்.

பயன்கள்

மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இந்த நிதி உதவியானது ஏழை விவசாயிகளின் வருவாயாக மட்டுமில்லாமல் பயிர்காலங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் நிதியாகவும் இருக்கும்.

விவசாயிகளுக்குக் கடன் அளித்து விட்டு அதைத் தள்ளுபடி செய்வதை விட உதவித்தொகையாக அளித்தால் அரசுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரியளவில் பாதிப்பு இருக்காது.

திட்டத்திற்கு உட்படாதவர்கள்

முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், மத்திய / மாநில அரசு ஊழியர்கள்.
கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய அனைத்து நபர்கள்.
மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 / அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து மேலதிக / ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்.
மருத்துவர்கள், பொறியாளர்கள், வக்கீல்கள், பட்டய கணக்காளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் போன்ற வல்லுநர்கள்.

பதிவு செய்யும் முறை

விவசாயிகள் அவர்களாகவே தங்கள் பதிவுகளை பிரதம மந்திரி கிசான் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (https://pmkisan.gov.in/) மற்றும் PMKISAN என்ற கைபேசி செயலி வாயிலாக செய்ய முடியும்.

சிறு மற்றும் குறு விவசாயி தங்களது ஆதார் எண், நிலத்தின் சர்வே எண் மற்றும் கஸ்ரா எண் விவரங்கள் கொண்டு தாங்களாகவே பதிவு செய்யலாம். இச்செயலி மற்றும் வலைத்தளம் மூலமாகவே விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கில் இந்த பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.


விவசாய சந்தை: vanga virka

நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணையதளம், விவசாயிகள் மற்றும் விவசாய பொருள்கள் உற்பத்தி செய்போவர்களுக்கு, தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், மேலும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கவும் இந்த விவசாய சந்தை பகுதி இலவச இணைப்பு பலமாக செயல்படுகிறது. விவசாயிகள் நமது இணையத்தை பயன்படுத்தி, தங்கள் விற்பனையை பெருக்க அழைக்கிறோம், நன்றி

நமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

[wptb id=1012]

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு நன்றி


நர்சரி செடிகள் ரூபாய் 5 மட்டுமே : cheapest nursery in chennai

சிறுதொழில்முனைவோர் .காம் இணையம், நர்சரி தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூபாய் 5/-க்கு அனைத்து வகையான பழ, மர மற்றும் பூ செடிகள் கிடைக்கும். தமிழ் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது. ரூபாய் 5000 முதலீடு கொண்டு 15000 வரை இலாபம் பார்க்க முடியும். மேலும் பெரிய நகரங்களில் நம் வீட்டு முன்னால் கூட இந்த தொழிலை தொடங்க முடியும்.

கௌஷிக் நர்சரி

+91 98430 66132

+91 63691 39990

ராக்கம்மா நர்சரி
9943321247
6374126562

PMP நர்சரி
97876 06249

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *