கீரை

கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

2042

கீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம் :

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் சாகுபடியில் காய்கறிகள் மற்றும் கொடி வகைகளுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை மற்றும் அவரை, பாகல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 1 எக்டருக்கு ரூ.3750 மானியம் வழங்கப்படும்.
  • இதேபோல் கீரை வகைகளுக்கு ரூ.2500 ஊக்கதொகை வழங்கப்படுகிறது.
  • இத்திட்டத்தில் விவசாயி அதிகபட்சமாக 2 எக்டர் வரை பயன் பெறலாம்.
  • மேலும், இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அங்கக சான்று பதிவு செய்ய கட்டணமாக ரூ.500 வழங்கப்பட்டு அங்கக சான்றளிப்பு துறையுடன் இணைந்து சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
  • இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நிலத்திற்கான கணினி சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு புத்தக நகல் (Nationalized Bank) மற்றும் 2 போட்டோ ஆகியவற்றுடன் அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புக்கு : 7810033083

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *